Thursday, December 28, 2006

இந்திய_அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு மின்சார தேவை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம்தான்.
1. இனி நாம் அணுபரிசோதனை செய்யவியலாது. பாக் கும் சினாவும் மேற்படி சோதனையில் முனனேறிவிடுவார்கள். நாம் பின்தங்க நேரிடும். நாட்டின் பாதுகாப்பு கேலிகுறி ஆகிவிடும்.
2. அமெரிக்கா சட்டத்தின் படி நடக்கவிட்டால் அணுஉலைக்கான ஈடுபொருள் வழங்குவது நிறத்தப்படும்.மேலும் சேமித்து வைத்து ஈடுபொருளையும் திரும்ப கொடுத்துவிடவேண்டும்.
3. செறிவூட்டபட்ட யூரேனியத்தை விற்ககூடாது.
4. 50 சதவிகித அணு உலைகள் உலக நாட்டின் பரிசோதனை வலையத்துக்குள் வந்துவிடும்
5. அமெரிக்கா ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நாட்டின் நலம் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு பாதாகமாக இவ்ஒப்பந்தமிருக்காது என்று கூறுகிறார்கள் . அமெரிக்காவை எந்தளவு நம்பலாம் என்று தெரியவில்லை.
6. இந்திய நாடாளுமன்றத்திலும் மேற்படி ஒப்பந்தத்துக்கு வாக்கெடுப்பு ஏன் நடத்தகூடாது.
7. ஹிலியத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சோதனையில் இந்தியாவை பங்காளியாக ஆக்குவதற்கு அமெரிக்கா ஒத்துக்கொள்ளாது சரியானதாக தெரியவில்லை.
8. இப்பொழுது உள்ள நிலையில் நாம் தொடர்ந்து இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றது என இந்திய அணுவிஞ்ஞானிகள் கூறுவதுக்கு பிரதமர் தெளிவான விளக்கம் அளிக்கவியலாதது. பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
9. நிறைய விவரங்கள் மறைக்கப்படுவதாக பெருத்த சந்தேகம் படித்தவர்கள் மத்தியிலேயே உள்ளது.
10. பத்திரிக்கையாளாகளோ, எதிர்கட்சிகளோ ஏதாவது ஒரு பக்க வாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்களோ ஒழிய முழுபக்க தோற்றத்தை யாரும் கொடுக்கவில்லை.
11. முதலில் தாட்டுபுட்டு என்று கத்திய கம்யூனிஸ்டுகள் கூட மம்தா உண்ணாவிரத்தை சமாளிக்கவியலாது அதிலேயே முழ்கிவிட்டார்கள்.
12. படிக்காத மக்களுக்கு இவ் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் அரசியல் கட்சிகளால் தெரியப்படுத்தபடவில்லை என்பது வேதனையான விசயமாகும்.
13. அறிவுஜிவிகளும் அடக்கி வாசிக்கிறார்கள்.
14. தனிபெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் இந்த ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு நடைமுறைக்கு கொண்டு வந்தால் உண்மையில் அந்த கட்சியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்
சிங்கூர் பகுதியில் டாடா கார் தொழிற்சாலை அமைக்க, மேற்கு வங்க அரசு விவசாய நிலங்களை, அவர்களின் விருப்பமில்லாமல் வற்புறத்தி பெற்றதாக கூறி, மம்தா உண்ணாவிரத பேராட்டத்தை ஆரம்பித்து இன்றோடு 26 நாளாக ஆகி விட்டது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டு வருகிறது.இந்நிகழ்வில் குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால், நிலமற்ற விவசாயிகளுக்காக போராடி அதானால் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிகட்டிலில் அமர்ந்திருக்கும் பொதுவுடைமை கட்சியினர், தொழில்அதிபர்க்கு சாதகமான போக்கினை மேற்கொள்வதும், முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவான பாஜக, திரினாமுல் கட்சிகள், விவசாயிகளுக்காக போராட்டாம் நடத்துவதும் வினோதமாக உள்ளது. மம்தா அவர்களின் உண்ணாவிரத்தை, ஒரு பொருட்டாக கருதாது போல். பொதுவுடைமை கட்சியினர் வெளியில் காட்டிகொண்டாலும், உண்மையில் ரொம்ப பயந்து போய்தான் உள்ளார்கள் என தெரிகிறது. புலிவால் பிடித்த நாயர் கதை போல் ஆயிற்று. பொதுவுடைமை கட்சியினரை ஆட்சிகட்டிலில் இருந்து இறக்க இதை விட சரியான ஆயூதம் வேறு ஏதும் எதிர்கட்சிகளுக்கு கிடைக்காது.காங்கிரஸ் கட்சியினரோ சண்டையில் எந்த பக்கம் வெற்றி கிட்டுமென நரிபோல் யோசித்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் விருப்பட்டுத்தான் தங்களது நிலத்தை கொடுத்தார்கள் உறுதியாக கூறும் புத்தேவ், ஏன் நிலத்தை திரும்ப பெற்றுகொள்விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தை அவர்கள் விருப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டு அதன்படி நடக்ககூடாது?. இது சரியான தீர்வாக இருக்குமா?

Saturday, December 09, 2006

கார்த்திகை

கார்த்திகைக்கு மறுநாள், நான், என் மனைவி , என் மகள் மூவரும் எங்க வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டு பெண் அகல் விளக்கை எடுத்து கொண்டு அந்த பெண் ணின் வீட்டு வாசலுக்கு செல்லுவது போல் இருந்தது , ஆனால் அந்த பெண் அவாகள் வீட்டு கழிப்பறையில் கொண்டு அகலை வைத்து விட்டு கழிப்பறை கதவை முடிவிட்டு தனது வீட்டுக்குள் சென்று விட்டார். என்னடி கழிப்பறையில் கொண்டு தீபத்தை வைக்கிறார்கள் என்றேன். அதற்கு என் மனைவி இது தெரியாதா, சென்னை பக்கம் இப்படிதான் 3ந்தேதி நாம் கொண்டாடியது சிவ கார்த்திகை இன் று விஷ்னு கார்த்திகை அதை மட்டமாக கருத வேண்டுமென்று சைவர்கள்" பீ" கார்த்திகையாக கொண்டாடுவார்கள் என்று சொன்னாள். எங்களுக்கு திருநெல்வேலி சொந்த ஊர், அங்கெல்லாம் இப்படி ஒரு பழக்கம் கிடையாது
காதல் திருமணம் செய்த பெண்கள் இரண்டு பேர் ஒருவர் இன்னொருவரிடம் உன்னுடைய திருமண வாழ்ககை எப்படி உள்ளது என்றார். சுகமொன்று இல்லை. நிச்சயம் செய்த திருமணம் பலர் சேர்ந்து நம்மை குழியில் தள்ளி விடுவார்கள்.காதல் திருமணத்தில் நாமே குழி யில் விழுந்து விடுகிறோம் என்றார்.

Friday, December 01, 2006

ஆசை வந்தது
லாரி ஓட்ட
ஓட்டுநரை தள்ளி
ஓட்டினான்
இருபது
உயிரை........