இந்திய_அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு மின்சார தேவை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம்தான்.
1. இனி நாம் அணுபரிசோதனை செய்யவியலாது. பாக் கும் சினாவும் மேற்படி சோதனையில் முனனேறிவிடுவார்கள். நாம் பின்தங்க நேரிடும். நாட்டின் பாதுகாப்பு கேலிகுறி ஆகிவிடும்.
2. அமெரிக்கா சட்டத்தின் படி நடக்கவிட்டால் அணுஉலைக்கான ஈடுபொருள் வழங்குவது நிறத்தப்படும்.மேலும் சேமித்து வைத்து ஈடுபொருளையும் திரும்ப கொடுத்துவிடவேண்டும்.
3. செறிவூட்டபட்ட யூரேனியத்தை விற்ககூடாது.
4. 50 சதவிகித அணு உலைகள் உலக நாட்டின் பரிசோதனை வலையத்துக்குள் வந்துவிடும்
5. அமெரிக்கா ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நாட்டின் நலம் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு பாதாகமாக இவ்ஒப்பந்தமிருக்காது என்று கூறுகிறார்கள் . அமெரிக்காவை எந்தளவு நம்பலாம் என்று தெரியவில்லை.
6. இந்திய நாடாளுமன்றத்திலும் மேற்படி ஒப்பந்தத்துக்கு வாக்கெடுப்பு ஏன் நடத்தகூடாது.
7. ஹிலியத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சோதனையில் இந்தியாவை பங்காளியாக ஆக்குவதற்கு அமெரிக்கா ஒத்துக்கொள்ளாது சரியானதாக தெரியவில்லை.
8. இப்பொழுது உள்ள நிலையில் நாம் தொடர்ந்து இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றது என இந்திய அணுவிஞ்ஞானிகள் கூறுவதுக்கு பிரதமர் தெளிவான விளக்கம் அளிக்கவியலாதது. பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
9. நிறைய விவரங்கள் மறைக்கப்படுவதாக பெருத்த சந்தேகம் படித்தவர்கள் மத்தியிலேயே உள்ளது.
10. பத்திரிக்கையாளாகளோ, எதிர்கட்சிகளோ ஏதாவது ஒரு பக்க வாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்களோ ஒழிய முழுபக்க தோற்றத்தை யாரும் கொடுக்கவில்லை.
11. முதலில் தாட்டுபுட்டு என்று கத்திய கம்யூனிஸ்டுகள் கூட மம்தா உண்ணாவிரத்தை சமாளிக்கவியலாது அதிலேயே முழ்கிவிட்டார்கள்.
12. படிக்காத மக்களுக்கு இவ் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் அரசியல் கட்சிகளால் தெரியப்படுத்தபடவில்லை என்பது வேதனையான விசயமாகும்.
13. அறிவுஜிவிகளும் அடக்கி வாசிக்கிறார்கள்.
14. தனிபெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் இந்த ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு நடைமுறைக்கு கொண்டு வந்தால் உண்மையில் அந்த கட்சியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்
Thursday, December 28, 2006
சிங்கூர் பகுதியில் டாடா கார் தொழிற்சாலை அமைக்க, மேற்கு வங்க அரசு விவசாய நிலங்களை, அவர்களின் விருப்பமில்லாமல் வற்புறத்தி பெற்றதாக கூறி, மம்தா உண்ணாவிரத பேராட்டத்தை ஆரம்பித்து இன்றோடு 26 நாளாக ஆகி விட்டது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டு வருகிறது.இந்நிகழ்வில் குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால், நிலமற்ற விவசாயிகளுக்காக போராடி அதானால் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிகட்டிலில் அமர்ந்திருக்கும் பொதுவுடைமை கட்சியினர், தொழில்அதிபர்க்கு சாதகமான போக்கினை மேற்கொள்வதும், முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவான பாஜக, திரினாமுல் கட்சிகள், விவசாயிகளுக்காக போராட்டாம் நடத்துவதும் வினோதமாக உள்ளது. மம்தா அவர்களின் உண்ணாவிரத்தை, ஒரு பொருட்டாக கருதாது போல். பொதுவுடைமை கட்சியினர் வெளியில் காட்டிகொண்டாலும், உண்மையில் ரொம்ப பயந்து போய்தான் உள்ளார்கள் என தெரிகிறது. புலிவால் பிடித்த நாயர் கதை போல் ஆயிற்று. பொதுவுடைமை கட்சியினரை ஆட்சிகட்டிலில் இருந்து இறக்க இதை விட சரியான ஆயூதம் வேறு ஏதும் எதிர்கட்சிகளுக்கு கிடைக்காது.காங்கிரஸ் கட்சியினரோ சண்டையில் எந்த பக்கம் வெற்றி கிட்டுமென நரிபோல் யோசித்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் விருப்பட்டுத்தான் தங்களது நிலத்தை கொடுத்தார்கள் உறுதியாக கூறும் புத்தேவ், ஏன் நிலத்தை திரும்ப பெற்றுகொள்விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தை அவர்கள் விருப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டு அதன்படி நடக்ககூடாது?. இது சரியான தீர்வாக இருக்குமா?
Saturday, December 09, 2006
கார்த்திகை
கார்த்திகைக்கு மறுநாள், நான், என் மனைவி , என் மகள் மூவரும் எங்க வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டு பெண் அகல் விளக்கை எடுத்து கொண்டு அந்த பெண் ணின் வீட்டு வாசலுக்கு செல்லுவது போல் இருந்தது , ஆனால் அந்த பெண் அவாகள் வீட்டு கழிப்பறையில் கொண்டு அகலை வைத்து விட்டு கழிப்பறை கதவை முடிவிட்டு தனது வீட்டுக்குள் சென்று விட்டார். என்னடி கழிப்பறையில் கொண்டு தீபத்தை வைக்கிறார்கள் என்றேன். அதற்கு என் மனைவி இது தெரியாதா, சென்னை பக்கம் இப்படிதான் 3ந்தேதி நாம் கொண்டாடியது சிவ கார்த்திகை இன் று விஷ்னு கார்த்திகை அதை மட்டமாக கருத வேண்டுமென்று சைவர்கள்" பீ" கார்த்திகையாக கொண்டாடுவார்கள் என்று சொன்னாள். எங்களுக்கு திருநெல்வேலி சொந்த ஊர், அங்கெல்லாம் இப்படி ஒரு பழக்கம் கிடையாது
கார்த்திகைக்கு மறுநாள், நான், என் மனைவி , என் மகள் மூவரும் எங்க வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டு பெண் அகல் விளக்கை எடுத்து கொண்டு அந்த பெண் ணின் வீட்டு வாசலுக்கு செல்லுவது போல் இருந்தது , ஆனால் அந்த பெண் அவாகள் வீட்டு கழிப்பறையில் கொண்டு அகலை வைத்து விட்டு கழிப்பறை கதவை முடிவிட்டு தனது வீட்டுக்குள் சென்று விட்டார். என்னடி கழிப்பறையில் கொண்டு தீபத்தை வைக்கிறார்கள் என்றேன். அதற்கு என் மனைவி இது தெரியாதா, சென்னை பக்கம் இப்படிதான் 3ந்தேதி நாம் கொண்டாடியது சிவ கார்த்திகை இன் று விஷ்னு கார்த்திகை அதை மட்டமாக கருத வேண்டுமென்று சைவர்கள்" பீ" கார்த்திகையாக கொண்டாடுவார்கள் என்று சொன்னாள். எங்களுக்கு திருநெல்வேலி சொந்த ஊர், அங்கெல்லாம் இப்படி ஒரு பழக்கம் கிடையாது
Saturday, November 25, 2006
Sunday, November 12, 2006
மணப்பாடு கடற்கரை
தசராவிற்கு அடுத்த நாள் திருச்செந்தூர் செல்லாம் என முடிவு எடுத்து புறப்பட்டோம். திருச்செந்தூரை அடைந்தோம்கோயிலில் நடை திறக்க நேரமிருந்ததால் அருகிலுள்ள குலசேகரப்பட்டணம் செல்லாமென வண்டியை திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் திருப்பினோம். ஒரே கூட்டம் முந்தாநாள் தசராவிற்கு கண்முழித்ததால் மனித குப்பைகள் போல் நிறைய பேர் அங்காங்கே உள்ள திண்ணையில் உறங்கி கொண்டிருந்தனர்.ஊருக்கு திரும்பும் கூட்டம் வேறு வண்டியை ரதம் போல் செலுத்த வைத்தது. கோயில் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு கோயிலுக்கு சென்றால் எந்த அன்னிய தாக்கம் உடையிலோ மனதிலோ இல்லாத தமிழர்கள் கூட்டம் அம்மனை காண திரண்டிருந்தது.இந்த கூட்டத்தில் நின்று அம்மனை பார்க்க வேண்டுமென்றால் வெகு நேரமாகுமென முடிவுக்கு வந்து மணப்பாடு சென்றோம். ஊரில் மருந்துக்கு கூட ஒரு இந்துவீடு இல்லை. வண்டி வறட்சியான அந்த மணற்குன்றின் மீது கரடுமுரடான சிமெண்ட் சாலையில் சாலையை செப்பினிட சாலைஓரங்களில் போட்டிருந்த ஜல்லிகுவியலில் டயர் அடிபட ஏறிகொண்டிருந்தது. சற்று வண்டியின் சன்னல் வழியாக மணப்பாட்டின் கடற்கரையினை பார்த்தால் என்ன அழகு .சின்ன தீபகற்ப மணற்திட்டு, மணற்பாடு மணற்குன்றுக்கு பிறந்த நோஞ்சான் பிள்ளைபோல் சின்னதாய் செல்ல பிள்ளைபோல் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது. குன்றியின் உச்சியில் இறங்கினோம். 15 அல்லது 16 நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித தூயஆவியின் தேவாலயம் ஒன்று அங்கு உள்ளது . அதில் என்னமோ மனம் லயிக்கவில்லை. அதன் அருகில் உள்ளே செல்ல அனுமதியில்லாத மைய அரசின் உயரமான கலங்கரை விளக்கம் . கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன பலகை புனிதசேவியர் குகைக்கு வழிகாட்டிகொண்டு நின்றது.அக்குகை மணற்குன்றின் அடிபக்க கடற்கரையில் சின்னதாக இருந்தது.15ம் நூற்றாண்டில் புனித சேவியர் இக்குகையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டதாக ஒரு கல்வெட்டு பறைசாற்றிக்கொண்டியிருந்தது.அந்த குகையில் ஒரு சின்ன நன்நீர் கிணறு .கடலுக்கும் குகைகிணறுக்கும் இரண்டு அடிதூரம் தான் இருக்கும் ஆனால் கிணற்று நீர் நல்ல குடிநீராக இருப்பது அதிசயம் தான். கடற்கறை ஒரமாக நடந்து அந்த மணற்திட்டிற்கு நடந்தோம். நான்கு வயது கூட நிரம்பாத ஐந்தாறு சின்ன குழந்தைகள் சுதந்திரமாக அம்மனமாக அலையுடன் விளையாடிக்கொண்டிருந்தன.அவர்கள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி.நாமும் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என அவர்களை கண்ட போதுஅடி மனதில் ஒரு எண்ணம் வந்து போனது. அலைகள் அதிமாக அடிக்கும் பொழுது சில மீன்கள் திட்டின் கரையில் மாட்டி தற்கொலை செய்து கொண்டு கருவாடாக காய்ந்து கொண்டிருந்தன. திட்டின் மேற்கு பக்க நுனிக்கு செல்ல செல்ல மணற்திட்டு கொஞ்சம் தொள தொளவேன இருந்தது.வேண்டாம் விபரீத பரீட்சையென திரும்ப மலையெறி வண்டியை அடைந்தோம்.வண்டி கீழே இறங்க இறங்க அந்த அழகிய கடற்கரை தோற்றம் கண்ணிலிருந்து மறைந்து கொண்டிருந்தது. ஆனால் மனதில் சித்திரமாய் தங்கிவிட்டது. அதனால் தான் எழுத தோன்றியதோ.
தசராவிற்கு அடுத்த நாள் திருச்செந்தூர் செல்லாம் என முடிவு எடுத்து புறப்பட்டோம். திருச்செந்தூரை அடைந்தோம்கோயிலில் நடை திறக்க நேரமிருந்ததால் அருகிலுள்ள குலசேகரப்பட்டணம் செல்லாமென வண்டியை திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் திருப்பினோம். ஒரே கூட்டம் முந்தாநாள் தசராவிற்கு கண்முழித்ததால் மனித குப்பைகள் போல் நிறைய பேர் அங்காங்கே உள்ள திண்ணையில் உறங்கி கொண்டிருந்தனர்.ஊருக்கு திரும்பும் கூட்டம் வேறு வண்டியை ரதம் போல் செலுத்த வைத்தது. கோயில் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு கோயிலுக்கு சென்றால் எந்த அன்னிய தாக்கம் உடையிலோ மனதிலோ இல்லாத தமிழர்கள் கூட்டம் அம்மனை காண திரண்டிருந்தது.இந்த கூட்டத்தில் நின்று அம்மனை பார்க்க வேண்டுமென்றால் வெகு நேரமாகுமென முடிவுக்கு வந்து மணப்பாடு சென்றோம். ஊரில் மருந்துக்கு கூட ஒரு இந்துவீடு இல்லை. வண்டி வறட்சியான அந்த மணற்குன்றின் மீது கரடுமுரடான சிமெண்ட் சாலையில் சாலையை செப்பினிட சாலைஓரங்களில் போட்டிருந்த ஜல்லிகுவியலில் டயர் அடிபட ஏறிகொண்டிருந்தது. சற்று வண்டியின் சன்னல் வழியாக மணப்பாட்டின் கடற்கரையினை பார்த்தால் என்ன அழகு .சின்ன தீபகற்ப மணற்திட்டு, மணற்பாடு மணற்குன்றுக்கு பிறந்த நோஞ்சான் பிள்ளைபோல் சின்னதாய் செல்ல பிள்ளைபோல் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது. குன்றியின் உச்சியில் இறங்கினோம். 15 அல்லது 16 நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித தூயஆவியின் தேவாலயம் ஒன்று அங்கு உள்ளது . அதில் என்னமோ மனம் லயிக்கவில்லை. அதன் அருகில் உள்ளே செல்ல அனுமதியில்லாத மைய அரசின் உயரமான கலங்கரை விளக்கம் . கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன பலகை புனிதசேவியர் குகைக்கு வழிகாட்டிகொண்டு நின்றது.அக்குகை மணற்குன்றின் அடிபக்க கடற்கரையில் சின்னதாக இருந்தது.15ம் நூற்றாண்டில் புனித சேவியர் இக்குகையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டதாக ஒரு கல்வெட்டு பறைசாற்றிக்கொண்டியிருந்தது.அந்த குகையில் ஒரு சின்ன நன்நீர் கிணறு .கடலுக்கும் குகைகிணறுக்கும் இரண்டு அடிதூரம் தான் இருக்கும் ஆனால் கிணற்று நீர் நல்ல குடிநீராக இருப்பது அதிசயம் தான். கடற்கறை ஒரமாக நடந்து அந்த மணற்திட்டிற்கு நடந்தோம். நான்கு வயது கூட நிரம்பாத ஐந்தாறு சின்ன குழந்தைகள் சுதந்திரமாக அம்மனமாக அலையுடன் விளையாடிக்கொண்டிருந்தன.அவர்கள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி.நாமும் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என அவர்களை கண்ட போதுஅடி மனதில் ஒரு எண்ணம் வந்து போனது. அலைகள் அதிமாக அடிக்கும் பொழுது சில மீன்கள் திட்டின் கரையில் மாட்டி தற்கொலை செய்து கொண்டு கருவாடாக காய்ந்து கொண்டிருந்தன. திட்டின் மேற்கு பக்க நுனிக்கு செல்ல செல்ல மணற்திட்டு கொஞ்சம் தொள தொளவேன இருந்தது.வேண்டாம் விபரீத பரீட்சையென திரும்ப மலையெறி வண்டியை அடைந்தோம்.வண்டி கீழே இறங்க இறங்க அந்த அழகிய கடற்கரை தோற்றம் கண்ணிலிருந்து மறைந்து கொண்டிருந்தது. ஆனால் மனதில் சித்திரமாய் தங்கிவிட்டது. அதனால் தான் எழுத தோன்றியதோ.
எச்சரிக்கை!
எனது நண்பர் உறவினர் ஒருவரின் மகளை, அமெரிக்காவில் உள்ள ஒரு சாப்ட்வேர் பொறியாளரான மாப்பிளைக்கு நிச்சயித்து, திருமணம் செய்தார்கள்.அத்திருமணத்தில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.
மாப்பிளையை அழைக்க விமான நிலையம் சென்ற என் நண்பர் மாப்பிளையுடன் ஒரு பெண் வர,அந்த பெண் மாப்பிளையின் நண்பரின் மனைவி மாப்பிளையின் நண்பரின் சார்பாக, திருமணத்துக்கு வந்து உள்ளார்கள் என அறிந்து, மனசு சற்று ஆறுதல் அடைந்தார் எனவும். அப்பெண் மாப்பிளையுடன் ரொம்ப நெருக்கமாய் இருந்தது கொஞ்சம் உறுத்தலாய் இருந்தாலும் அமெரிக்க நாகரிகமாய் இருக்கலாம் என மெளனமாய் இருந்து விட்டார்கள். தம்பதிகள் அமெரிக்கா சென்ற பின்னும் அப்பெண் புதுமாப்பிளையுடன் இழைய புது மணப்பெண் விசாரிக்க, மணமக்களிடையே பெருத்த சண்டையாகி , விவாக ரத்து செய்து புதுமணப்பெண்ணின் விசாவை பிடுங்கி வைத்து கொண்டு, அப்பெண்ணை வீட்டை விட்டு துரத்தி விட்டான். தன் நண்பனின் மனைவியை திருமணம் செய்து கொண்டதாகவும் ,விவரம் அறிந்த பெற்றோர்கள் அமெரிக்க வாழ் உறவினர்களை உடன் தொடர்பு கொண்டு புதுபெண்ணை காப்பாற்றி ஒரு வேலை வாங்கி கொடுத்தார்கள் என்றும், இச்செய்தியால் மனம் உடைந்த மணப்பெண்ணின் தந்தை தற்போது மரணம் அ டைந்து விட்டார் என்றும். மாப்பிளையின் நண்பரும் அமெரிக்கா வேலையை துறந்து இந்திய வந்து சொந்த ஊரில் பைத்தியகாரனாய் அலைவதாகவும் சொன்னார். தந்தையின் இறுதிசடங்கு செய்ய அந்த பெண் தனது தாயை இந்தியாவில் தனியாக விட்டு விட்டு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
சினேக துரோகம், அமெரிக்க மோகம், பண்பாட்டு மாற்றம் இது மூன்றும் சேர்ந்து எத்தனை துன்பத்தை ஏற்படுத்திவிட்டது.
எனது நண்பர் உறவினர் ஒருவரின் மகளை, அமெரிக்காவில் உள்ள ஒரு சாப்ட்வேர் பொறியாளரான மாப்பிளைக்கு நிச்சயித்து, திருமணம் செய்தார்கள்.அத்திருமணத்தில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.
மாப்பிளையை அழைக்க விமான நிலையம் சென்ற என் நண்பர் மாப்பிளையுடன் ஒரு பெண் வர,அந்த பெண் மாப்பிளையின் நண்பரின் மனைவி மாப்பிளையின் நண்பரின் சார்பாக, திருமணத்துக்கு வந்து உள்ளார்கள் என அறிந்து, மனசு சற்று ஆறுதல் அடைந்தார் எனவும். அப்பெண் மாப்பிளையுடன் ரொம்ப நெருக்கமாய் இருந்தது கொஞ்சம் உறுத்தலாய் இருந்தாலும் அமெரிக்க நாகரிகமாய் இருக்கலாம் என மெளனமாய் இருந்து விட்டார்கள். தம்பதிகள் அமெரிக்கா சென்ற பின்னும் அப்பெண் புதுமாப்பிளையுடன் இழைய புது மணப்பெண் விசாரிக்க, மணமக்களிடையே பெருத்த சண்டையாகி , விவாக ரத்து செய்து புதுமணப்பெண்ணின் விசாவை பிடுங்கி வைத்து கொண்டு, அப்பெண்ணை வீட்டை விட்டு துரத்தி விட்டான். தன் நண்பனின் மனைவியை திருமணம் செய்து கொண்டதாகவும் ,விவரம் அறிந்த பெற்றோர்கள் அமெரிக்க வாழ் உறவினர்களை உடன் தொடர்பு கொண்டு புதுபெண்ணை காப்பாற்றி ஒரு வேலை வாங்கி கொடுத்தார்கள் என்றும், இச்செய்தியால் மனம் உடைந்த மணப்பெண்ணின் தந்தை தற்போது மரணம் அ டைந்து விட்டார் என்றும். மாப்பிளையின் நண்பரும் அமெரிக்கா வேலையை துறந்து இந்திய வந்து சொந்த ஊரில் பைத்தியகாரனாய் அலைவதாகவும் சொன்னார். தந்தையின் இறுதிசடங்கு செய்ய அந்த பெண் தனது தாயை இந்தியாவில் தனியாக விட்டு விட்டு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
சினேக துரோகம், அமெரிக்க மோகம், பண்பாட்டு மாற்றம் இது மூன்றும் சேர்ந்து எத்தனை துன்பத்தை ஏற்படுத்திவிட்டது.
மாநில கட்சிகளின் அங்கிகாரம்
இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிக்க பட்ட கட்சியினை மாநில கட்சியாக அங்கிகாரம் செய்ய சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி குறிபிட்ட விழுக்காடு ஒட்டுகளும். சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள ஒரு புதிய கட்சியினை தேர்தல்ஆணையம் அங்கிகாரம் அளித்து ஒரு சின்னத்தை அந்த கட்சிக்கு அளிக்கிறது. இவ் நிபந்தனையினை நிறைவேற்ற பாமக , மாதிமுக போன்ற கட்சிகள் பல தேர்தல்களில் முயன்று, மேற்படி நிபந்தனை நிறைவு செய்ய இயலாமல்,கடைசியில் திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்து அங்கிகாரம் பெற்றன. தற்போது, நடிகர் விஜயகாந்த் கட்சி அதிக விழுக்காடு ஓட்டு பெற்றும் , சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர் இல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெறவியலவில்லை.
எனவே, இனி புதிதாக ஆரம்பிக்கபடும் கட்சி, தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெற, தனித்து போட்டியிட்டு, மேற்படி
நிப்ந்தனையினை நிறைவு செய்ய வேண்டும் . அதன்பின் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். அனைத்து கட்சிகளும் இருபது ஆண்டுகளுக்கொரு முறை தனித்துபோட்டியிட்டு மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறு நிறைவு செய்யாத கட்சிகளின் அங்கிகாரத்தை நிறுத்தி வைக்க வேண்டும் , சின்னத்தையும் முடக்கிவைக்க வேண்டும் .மேற்படி கட்சி எப்பொழுது நிபந்தனைகளை நிறைவு செய்கிறதோ அப்பொழுது அங்கிகாரத்தையும் அக்கட்சியின் முடக்கப்பட்ட சின்னத்தையும் அக்கட்சிக்கு வழங்கும் வகையில் சட்டதிருத்தம் செய்ய வேண்டும்.. அதுதான் சரியாக இருக்கும்.
இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிக்க பட்ட கட்சியினை மாநில கட்சியாக அங்கிகாரம் செய்ய சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி குறிபிட்ட விழுக்காடு ஒட்டுகளும். சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள ஒரு புதிய கட்சியினை தேர்தல்ஆணையம் அங்கிகாரம் அளித்து ஒரு சின்னத்தை அந்த கட்சிக்கு அளிக்கிறது. இவ் நிபந்தனையினை நிறைவேற்ற பாமக , மாதிமுக போன்ற கட்சிகள் பல தேர்தல்களில் முயன்று, மேற்படி நிபந்தனை நிறைவு செய்ய இயலாமல்,கடைசியில் திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்து அங்கிகாரம் பெற்றன. தற்போது, நடிகர் விஜயகாந்த் கட்சி அதிக விழுக்காடு ஓட்டு பெற்றும் , சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர் இல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெறவியலவில்லை.
எனவே, இனி புதிதாக ஆரம்பிக்கபடும் கட்சி, தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெற, தனித்து போட்டியிட்டு, மேற்படி
நிப்ந்தனையினை நிறைவு செய்ய வேண்டும் . அதன்பின் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். அனைத்து கட்சிகளும் இருபது ஆண்டுகளுக்கொரு முறை தனித்துபோட்டியிட்டு மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறு நிறைவு செய்யாத கட்சிகளின் அங்கிகாரத்தை நிறுத்தி வைக்க வேண்டும் , சின்னத்தையும் முடக்கிவைக்க வேண்டும் .மேற்படி கட்சி எப்பொழுது நிபந்தனைகளை நிறைவு செய்கிறதோ அப்பொழுது அங்கிகாரத்தையும் அக்கட்சியின் முடக்கப்பட்ட சின்னத்தையும் அக்கட்சிக்கு வழங்கும் வகையில் சட்டதிருத்தம் செய்ய வேண்டும்.. அதுதான் சரியாக இருக்கும்.
Subscribe to:
Comments (Atom)